×

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை: இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் இன்று ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று இந்திய எல்லையோர பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகல் சுமார் 2 மணியளவில் சுந்தர்பானி செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சில பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.

இதை கவனித்த நமது பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகுமாறு எச்சரித்தனர். இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. பலியான பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்புப்படையினர் ஆயுதங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Security forces ,terrorists ,Jammu ,Kashmir ,Indian , Jammu and Kashmir, security forces, terrorists, gunfire, Indian soldiers, martial violence
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு