×

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் வெடிகுண்டு வெடிப்பு: பொதுமக்கள் 3 பேர் பலி

குல்காம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் வெடிகுண்டு வெடித்ததில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள லாரோ  பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்தினர். வீட்டிற்குள் பதுங்கி இருந்தபடி, பாதுகாப்பு வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு  நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது  தகவல் இல்லை. தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்திற்கு அருகே வெடிகுண்டி வெடித்துள்ளது. இதில் பொதுமக்களில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும்   சண்டை நடந்த இடத்திற்கு அருகே செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jammu ,civilians ,Kashmir , Jammu and Kashmir, terrorists, explosives, civilians, kills
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை