×

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குல்காம்:  ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள லாரோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தகவல் இல்லை. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : security personnel ,security forces ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, security force, gunfire, terrorists. Shot dead
× RELATED சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 29 நக்சல்கள் சுட்டுக்கொலை..!!