சென்னை: பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரன் சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார். அசோக் நகர் அமமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ரத்தினசபாபதி எம்எல்ஏ பங்கேற்றுள்ளார். மேலும் கலைசெல்வன், பிரபு உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 18 எம்.எல்.ஏ வழக்கில் தீர்ப்புக்கு பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி ஆலோசனை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.