சென்னை : சபரிமலை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருப்பதே சரி என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் ரஜினியின் கருத்து அவரது தெளிவின்மையை காட்டுகிறது. எந்த விஷயத்தில் ஆணித்தரமாக கருத்து சொல்ல வேண்டும். லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தேவைப்படும் போது அதிமுக.,விற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர் என்றார்.