தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம், வேளச்சேரி - தாம்பரம் சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான நிறுவனத்திடம் கடந்த 2012ம் ஆண்டு வீடு முன்பதிவு செய்து, பலர் கோடிக்கணக்கில் பணம் செலுத்தினர். இவர்களுக்கு 2015ம் ஆண்டு வீடுகள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை. மேலும் கடந்த 2 மாதங்களாக அங்கு கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பணம் செலுத்தியவர்கள் கேட்டபோது, எங்களிடம் பணம் இல்லை. அதனால் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது, என தெரிவித்ததாக கூறப்படுகிறது.