தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி மசூதி தெருவில் வசிப்பவர் மாயவன்(56). இவர், அஞ்செட்டி மின்வாரிய அலுவலகத்தில், இளநிலை பொறியாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை, அஞ்செட்டி அருகே மட்டியூர் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதானது. இதையடுத்து, அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீர்செய்யும் பணிகள் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினமும் அடிக்கடி மின்சாரம் தடைபட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, பழனி ஆகியோர், அன்று மாலை மாயவன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது, அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவற்றை அவர்கள் உடைத்துள்ளனர்.