மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

சென்னை: டெங்குவை தடுப்பது குறித்து மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல்வேறு அரசு துறைகள் சார்பில் தமிழகம் முழுவதும் டெங்கு விழிப்புணர்வு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், சென்னை மெட்ரோ ரயில்  நிர்வாகம் மூலம் ஊழியர்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு முகாம்கள்  அமைத்து, முன்னெச்சரிக்கைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு மெட்ரோ ரயில் நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது, சுத்தமான குடிநீரை பருகுவது, ரயில் நிலையத்தை சுற்றி தண்ணீர் தேங்காமல் உடனடியாக அகற்றுவது உள்ளிட்ட அறிவுரை வழங்கப்படுகிறது. சுத்தமும், சுகாதாரமும் முக்கியமானதாக வைத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்படுகிறது. இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டு ஊழியர்களுக்கு பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: