வேளச்சேரி வரை இயக்கப்பட்ட ரயில் ஓட்டையில் சிக்கியவர் அலறல்

சென்னை: கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயிலில் ஒரு குறிப்பிட்ட பெட்டியில் திடீரென ஓட்டை விழுந்தது. அதில் சிக்கிய நபர் அலறியதால், மற்ற பயணிகள் அலறினர். சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி இடையே 50க்கும் மேற்பட்ட சர்வீஸ்களில் பறக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்து வருகின்றன. இந்நிலையில் கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு நேற்று பிற்பகலில் பறக்கும் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது பறக்கும் ரயிலில் பயணம் செய்த பயணி ரயிலின் உள்ளே இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

திடீரென அந்த பயணியின் பாரம் தாங்காமல் ரயில் பெட்டியில் ஓட்டை விழுந்தது. இதில் அவரது கால் சிக்கி தண்டவாளத்தை நோக்கி கீழே போனது. அதிர்ச்சியில் அவர் அலறினார். உடனடியாக அவரை நோக்கி வந்த பயணிகள் ஓடும் ரயில் பெட்டி ஓட்டையில் சிக்கிய அவரை மேலே பிடித்து இழுத்து மீட்டனர். இதற்கிடையில் அந்த நபரின் சத்தத்தை கேட்டு மற்றவர்களும் அலறி பெட்டியின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்துக்கு சென்றனர்.

இதுகுறித்து வேளச்சேரி ரயில் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: