சென்னை: கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயிலில் ஒரு குறிப்பிட்ட பெட்டியில் திடீரென ஓட்டை விழுந்தது. அதில் சிக்கிய நபர் அலறியதால், மற்ற பயணிகள் அலறினர். சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி இடையே 50க்கும் மேற்பட்ட சர்வீஸ்களில் பறக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்து வருகின்றன. இந்நிலையில் கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு நேற்று பிற்பகலில் பறக்கும் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது பறக்கும் ரயிலில் பயணம் செய்த பயணி ரயிலின் உள்ளே இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தார்.