சென்னை: மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் முன்பு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் முன்பு நேற்று காலை 11 மணியளவில் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் பெருந்திரள் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. இதில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் கலந்துகொண்டு ஊதிய உயர்வு, பாரபட்சம் காட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மெட்ரோ ரயிலில் ஏற்கனவே ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சம்பளத்தை குறைத்ததாலும், குறைத்தது மட்டும் அல்ல அவர்களிடம் இருந்து ஏற்கனவே வழங்கப்பட்ட சம்பளத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேல் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.