சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுடன் அமமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணைப்பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சசிகலா கைதாகி சிைறக்கு சென்ற பிறகு டிடிவி தினகரன் அமமுக என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இதற்கிடையில் ஆளுனரிடம் முதல்வர் குறித்து மனு ெகாடுத்ததாக தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இவர்கள் அனைவரும் தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த காரணத்தால், 18 சட்டமன்ற தொகுதிகளில் எந்த பணியும் நடைபெறவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தமிழக அரசின் எந்தவித சலுகைகளும், திட்டங்களும் தங்கள் தொகுதிக்கு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி வந்தனர். பல மாஜி எம்.எல்.ஏக்கள் இதற்காக போராட்டங்களையும் நடத்தினர்.