நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 40 தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்: திமுக அறிவிப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிக்கும் திமுக சார்பில் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. வெற்றி பெறுவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் மு.க.ஸ்டாலின் பேச அனுமதி வழங்கினார். அப்போது நிர்வாகிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர். அந்த கருத்துக்களை அவர் கவனமாக கேட்டு கொண்டார். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது, வெற்றி பெற என்னென்ன வியூகங்களை வகுக்க வேண்டும், வேட்பாளர்கள் யார், யாரை நிறுத்தலாம், கூட்டணி குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிக்கும் தொகுதி வாரியாக திமுக பொறுப்பாளர்கள் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக தொகுதிக்கு சென்று பணியை தொடங்க உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: 2019ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கு திமுக சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். திருவள்ளூர் தொகுதி- மு.சண்முகம், ப.ரங்கநாதன். சென்னை வடக்கு- இ.கருணாநிதி, சி.எச்.சேகர். சென்னை தெற்கு-ஆர்.டி.சேகர், சி.வி.எம்.பி.எழிலரசன். சென்னை மத்தி, எஸ்.ஆர்.ராஜா, வி.ஜி.ராஜேந்திரன். பெரும்புதூர்-அசன் முகம்மது ஜின்னா, காசி முத்துமாணிக்கம். காஞ்சிபுரம்- கே.பி.பி.சாமி, ப.தாயகம் கவி. அரக்கோணம்-கே.எஸ்.ரவிச்சந்திரன், எஸ்.அரவிந்த் ரமேஷ். வேலூர்- டாக்டர் த.மஸ்தான், ஜே.எல்.ஈஸ்வரப்பன். கிருஷ்ணகிரி- எம்.பி.கிரி, வேலூர் கார்த்திகேயன். தர்மபுரி-கு.பிச்சாண்டி, எஸ்.அம்பேத்குமார். திருவண்ணாமலை-இ.ஜி.சுகவனம், பி.முருகன். ஆரணி-வசந்தம் கார்த்திகேயன், இ.பரந்தாமன். விழுப்புரம்- பி.என்.பி.இன்பசேகரன், தமிழன் பிரசன்னா. கள்ளக்குறிச்சி- வி.பி.துரைசாமி, ஏ.நல்லதம்பி. சேலம்-ஆர்.மாசிலாமணி, வி.சி.சந்திரகுமார். நாமக்கல்-பொங்கலூர் நா.பழனிசாமி,எஸ்.ஆர்.பார்த்திபன். ஈரோடு-கே.இராமச்சந்திரன், கே.எஸ்.இராதாகிருஷ்ணன். திருப்பூர்-எம்.சின்னசாமி, எம்.திராவிடமணி. நீலகிரி-டி.ஆர்.பி.ராஜா, ஆர்.ஜெயராமகிருஷ்ணன்.

கோயம்புத்தூர்-வ.முல்லைவேந்தன், மகேஷ் பொய்யாமொழி. பொள்ளாச்சி-கே.பி.ராமலிங்கம், ஆர்.கிரிராஜன். திண்டுக்கல்-மு.பெ.சாமிநாதன், வழக்கறிஞர் கே.ஜே.சரவணன். கரூர்-சுப்புலட்சுமி ஜெகதீசன், சுபா.சந்திரசேகர். திருச்சிராப்பள்ளி-ஏ.கே.எஸ்.விஜயன், எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம். பெரம்பலூர்- டி.உதயசூரியன், நெல்லிக்குப்பம் புகழேந்தி. கடலூர்- கோவி.செழியன், கும்பகோணம் க. அன்பழகன். சிதம்பரம்- சிவ.வீ.மெய்யநாதன், சபா ராஜேந்திரன். மயிலாடுதுறை-உ.மதிவாணன், துரை (இளைஞரணி). நாகப்பட்டினம்-எம்.ராமச்சந்திரன்.துரை.கி.சரவணன். தஞ்சாவூர்-டி.எம்.செல்வகணபதி, கடலூர் இள.புகழேந்தி. சிவகங்கை-பொன்.முத்துராமலிங்கம், எம்.அப்பாவு. மதுரை-வி.சத்தியமூர்த்தி, வீ.கண்ணதாசன். தேனி-வீ.கருப்பசாமி பாண்டியன், எஸ்.ஜோயல். விருதுநகர்-பூங்கோதை ஆலடி அருணா, கம்பம் பெ. செல்வேந்திரன். ராமநாதபுரம்- இ.பெரியசாமி வழக்கறிஞர் இரா.நீலகண்டன். தூத்துக்குடி-எஸ்.தங்கப்பாண்டியன், வழக்கறிஞர் மனுராஜ் சுந்தரம். தென்காசி-குழந்தை தமிழரசன், டி.பி.எம். மைதீன்கான். திருநெல்வேலி-எஸ்.ஆஸ்டின், குத்தாலம் பி.கல்யாணம். கன்னியாகுமரி-ஆர்.தாமரைசெல்வன், எஸ்.தங்கவேலு. புதுவை -முனைவர் சபாபதிமோகன், பரணி கே.மணி ஆகியோர் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள். திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்களோடு இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: