கால்டாக்சி டிரைவர் வெட்டிக் கொலை: இரட்ைடக் கொலையில் தொடர்புடையவருக்கு வலைவீச்சு

சென்னை: மந்தைவெளியில் கால்டாக்சி டிரைவர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சிவா (29). இவர் கால்டாக்சி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அடிதடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து 10 மணிக்கு சிவா வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவருடைய வீட்டிற்கு வந்த அவருடைய நண்பர்கள் 3 பேர், ஏதோ பேச வேண்டும் என்று கூறி சிவாவை வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளனர். நான்கு பேரும் பேசிக் கொண்டே மந்தைவெளி டிப்போ அருகே நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது மேலும் சிலர் இவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

இதைப் பார்த்த சிவா, தன்னை ஏதோ ெசய்வதற்காகத்தான் இவர்கள் வந்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்டார். உடனே அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். அந்த கும்பலும் அவரை விடாமல் துரத்தி ஓட ஓட சரமாரியாக வெட்டி கொலை செய்தது.   சம்பவ இடத்துக்கு வந்த பட்டினப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை செய்தனர். இந்த விசாரணையின் முடிவில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்துதான் இந்த கொலை செய்துள்ளனர் என தெரியவந்தது. அவர்களை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: