சபரிமலைக்கு செல்லும் சமூக செயற்பாட்டாளர்கள் பக்தர்கள் அல்ல : பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை : சபரிமலைக்கு செல்லும் சமூக செயற்பாட்டாளர்கள் பக்தர்கள் அல்ல, சமூக ஆர்வலர்களுக்கு அங்கு இடம் கிடையாது என்று கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். கேரளாவில் இருக்கும் அரசாங்கம் எந்த ஒரு தெளிவும் இல்லாமல் ஏதோ ஒரு பழிவாங்கும் சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்த அவர், சபரிமலை விவகாரத்தை கேரள அரசு உதாசீனப்படுத்துவது சரியல்ல என்றும் பொறுப்புகளை தேவசம் போர்டு கையில் கொடுத்துவிட்டு கேரள அரசு அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: