×

மதுரை அருகே பேருந்துக்காக நின்றவர்கள் மீது கார் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு

மதுரை : மதுரை வாடிப்பட்டி அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்த மரத்தி, லட்சுமி, வசந்தி மற்றும் அவரது 8 மாத கைக்குழந்தை ஆத்விக் ஆகியோர் மதுரை செல்வதற்காக மதுரை-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சாலையோரமாக நின்றுள்ளனர். அப்போது மதுரையில் இருந்து பல்லடம் நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற காரின் இடதுபக்க டயர் பஞ்சர் ஆனது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் சாலையோரத்தில் நின்றவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் லட்சுமி, மரத்தி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். மேலும் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த வசந்தி, அவரது மகன் ஆத்விக் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 உயிரிழந்துள்ளதால் வடுகப்பட்டி கிராமத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bus accident ,Madurai , Madurai,Bus,Accident,DEATH
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...