சென்னையில் இளைஞர் வெட்டிக்கொலை : 8 பேர் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை

சென்னை : சென்னை மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே இளைஞரை 8 பேர் கும்பல் வெட்டிக்கொலை செய்துள்ளனர். மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்த 30 வயது இளைஞரை மர்ம நபர்கள் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் உயிரிழந்தவரின் பெயர் சிவா என்றும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த படுகொலையில் சந்தேகிக்கப்படும் லட்சுமி என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 8 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்களையும் போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: