சென்னை : சென்னை மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே இளைஞரை 8 பேர் கும்பல் வெட்டிக்கொலை செய்துள்ளனர். மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்த 30 வயது இளைஞரை மர்ம நபர்கள் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் 8 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரியவந்தது. மேலும் உயிரிழந்தவரின் பெயர் சிவா என்றும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.