×

சென்னைக்கு வரும் ஜோத்பூர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பிடிபட்டார்

சென்னை : ஜோத்பூர் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பியவர் போலீசாரிடம் சிக்கினார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வடபழனியை சேர்ந்த பிரவீன்குமாரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எஸ்எம்எஸ் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பின்னர் உடனடியாக போலீசார் பாதுகாப்பு அதிகரித்ததால் அங்குள்ள பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் வந்துள்ள அந்த தகவலில், சென்னைக்கு வரும் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலை  வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.  வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர்.  

இதற்கிடையே எழும்பூர் மற்றும் சென்டல் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் மற்றும் சென்டல் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவந்தது. மோப்ப நாய்கள் உதவியுடன் ரயில்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  வடபழனியை சேர்ந்த பிரவீன்குமார் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jodhpur , Try to Jodhpur train ,collided , Chennai ,caught
× RELATED முகலாய பேரரசர் அக்பர் கொடுங்கோலன்,...