சென்னை: முதல் திருமணத்தை மறைத்து லிவிங் டுகெதர் பாணியில் குடும்பம் நடத்தி பெண் சித்த மருத்துவரிடம் 8 லட்சம் பணம், 30 சவரன் நகையை பறித்த காதல் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை போரூர் ஆலப்பாக்கம் செயின்ட் தாமஸ் தெருவை சேர்ந்தவர் மோகனா (30). சித்த மருத்துவரான இவர், சாலிகிராமத்தில் சித்த மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் சுரேஷ்குமார் என்பவரிடம் வேலை செய்து வந்தார். பின்னர் நாளடைவில் மோகனாவுக்கும் சுரேஷ்குமாருக்கும் இடையயே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையே தனது காதலன் சுரேஷ்குமார் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால், சுரேஷ்குமார் குறித்து மோகனா விசாரித்து உள்ளார். அப்போது, சுரேஷூக்கு ஏற்கனவே திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் இருப்பது ெதரியவந்தது.