×

லிவிங் டுகெதர் பாணியில் குடும்பம் நடத்தி பெண் சித்த மருத்துவரிடம் 8 லட்சம், 30 சவரன் பறிப்பு: காதல் கணவரிடம் போலீசார் விசாரணை

சென்னை: முதல் திருமணத்தை மறைத்து லிவிங் டுகெதர் பாணியில் குடும்பம் நடத்தி பெண் சித்த மருத்துவரிடம் 8 லட்சம் பணம், 30 சவரன் நகையை பறித்த காதல் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை போரூர் ஆலப்பாக்கம் செயின்ட் தாமஸ் தெருவை சேர்ந்தவர் மோகனா (30). சித்த மருத்துவரான இவர், சாலிகிராமத்தில் சித்த மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் சுரேஷ்குமார் என்பவரிடம் வேலை செய்து வந்தார்.  பின்னர் நாளடைவில் மோகனாவுக்கும் சுரேஷ்குமாருக்கும் இடையயே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  அதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.  இதற்கிடையே தனது காதலன் சுரேஷ்குமார் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால், சுரேஷ்குமார் குறித்து மோகனா விசாரித்து உள்ளார். அப்போது, சுரேஷூக்கு ஏற்கனவே திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் இருப்பது ெதரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மோகனா சம்பவம் குறித்து சுரேஷ்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் உண்மைதான் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோகனா தனது காதல் கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், தன்னுடன் ஒன்றாக வாழ்க்கை நடத்தி சிறுக சிறுக ₹8 லட்சம் மற்றும் 30 சவரன் நகையை பறித்து என்னை மோசடி செய்து விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சித்த மருத்துவர் சுரேஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Siddha ,doctor ,husband police , Living Together, shaving flap, love husband
× RELATED சென்னை அருகே சித்த மருத்துவமனையில்...