மதுரையில் கல்லூரி மாணவர் வெட்டி கொலை

மதுரை: மதுரை அனுப்பானடியை சேர்ந்த பாலமுருகன் மகன் பிரவீண்குமார் (20) காமராஜர் பல்கலை கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, தெய்வக்கனி தெருவில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தவரை டூவீலர்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. தெப்பக்குளம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரவீண்குமாருக்கும், இதே பகுதியை சேர்ந்த சைக்கோ கண்ணனுக்குமான முன்விரோதத்தில் கொலை நடந்தது தெரியவந்தது. கும்பலில் 16 வயது சிறுவர்களும் உள்ளனர். இவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: