×

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 3 மாநிலங்களுக்கு உள்துறை உத்தரவு

கேரளாவில் உள்ள சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வலுத்து வருகின்றது. ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்குள் செல்ல முயலும் பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்துவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், “மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்கும் தேவையான  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கலாம். சமூக வலைதளங்கள் மற்றும் இன்டர்நெட் மூலமாக வதந்திகள், பரப்பப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். அவசியமெனில் அவற்றை முடக்கவும் உத்தரவிடவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : states , Home order , 3 states , precautionary measures
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து