சென்னை : சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்னை மாநகராட்சி மின்சார சுடுகாடு உள்ளது. இதன் அருகேயுள்ள மழைநீர் கால்வாய் புதரில் யாரோ பச்சிளம் குழந்தையை வீசி சென்றனர்.இந்த விவகாரத்தில்,அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குழந்தையை வீசி சென்ற பெண்ணை கைது செய்தனர்.. இதுகுறித்து போலீஸ் கூறியதாவது:
காரம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த டெய்சி லாவண்யா (22) குழந்தையை வீசியது தெரியவந்தது. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அவரது தாய் இறந்துவிட்டார். இதனால் திருமண பேச்சு அப்படியே நின்றுவிட்டது. ஆனால் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட வாலிபர் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அதில் அப்பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதற்கிடையே யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பார்த்து கொள்ள முடியாததால் முட்புதரில் வீசியுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட லாவண்யாவை மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
எல்லைமீறிய உறவால் பிறந்த பெண் குழந்தையை கொன்ற தாய்
வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள கன்னிகாபுரம் அம்மா உணவகம் அருகே உள்ள குப்பை தொட்டியில், கடந்த மாதம், 17ம் தேதி பச்சிளம்குழந்தை ஒன்று கிடந்தது. தகவலறிந்து வந்த கிண்டி போலீசார் குழந்தையை சோதனை செய்தபோது, அது இறந்திருந்தது. மேலும், பிறந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில், தொப்புள் கொடி கூட அப்படியே இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த வசந்தி (22), ஜெயராஜ் (25) இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
உறவு எல்லை மீறிச்சென்றதால், குழந்ைத பிறந்துள்ளது. பிறகு, அதனால் தொல்லை ஏற்பட்டு விடும் எனக்கருதி வசந்தி, தனது தாய் விஜயா (52) என்பவருடன் சேர்ந்து ெகாலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி இரவில் கொலை செய்து, யாருக்கும் தெரியாத வகையில் குப்பை தொட்டியில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். குழந்தைைய கொலை செய்து குப்பையில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி