×

அதிமுக-விற்கு ரிங் மாஸ்டர் போல செயல்படுகிறார் பிரதமர் : ஸ்டாலின் குற்றச்சாட்டு

தஞ்சை: ஒருங்கிணைந்த தலைமை இல்லாத அ.தி.மு.க-விற்கு பிரதமர் நரேந்திர மோடி ரிங்-மாஸ்டர் போன்று செயல்படுவதாக, தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், எத்தனையோ வழக்குகளை கடந்து வந்த தம்மை முதல்வர் பழனிசாமி மிரட்டி பார்ப்பதாக கூறினார். முதல்வர் மீது சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்ட வரலாறு தமிழ்நாட்டிலே எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கிடைத்திருக்கிறது என்றார்.

ஜெயலலிதா மரணத்திற்கு பின்னால் ஒரு விபத்தின் காரணமாக, ஒரு அதிர்ஷ்டத்தின் காரணமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டிலே நடந்து கொண்டிருக்கும் ஆட்சியில் எல்லாத் துறைகளிலுமே ஊழல் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்திலே ஆங்கிலேயரை பார்த்து “வெள்ளையனே வெளியேறு வெளியேறு என்று சொன்னோம். இப்பொழுது என்ன சொல்லவேண்டும் என்றால் ‘கொள்ளையனே இந்த நாட்டை விட்டு வெளியேறு’ என்று சொல்லக்கூடிய நிலை வந்து இருக்கிறது என ஸ்டாலின் பேசினார்.

இதுவரை தமிழ்நாட்டிலே எத்தனையோ முதல்வர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீதெல்லாம்கூட புகார்கள் வந்திருக்கிறது, ஊழல்கள் வந்திருக்கிறது, குற்றச்சாட்டுகள் வந்திருக்கிறது. ஆனால், முதல்வர் மீது இதுவரை தமிழ்நாட்டிலே சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்ட வரலாறு எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கிடைத்திருக்கிறது என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin , AIADMK, DMK, Stalin, Ring Master
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...