திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பக்தர்களை தவிர செய்தியாளர், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குமாறு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்புக்கு பின் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கல், பம்பையில் போராட்டம் வெடித்தது. கோயிலுக்குள் செல்வதற்கு பெண்கள் வந்தனர். கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை ஆந்திராவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் போலீஸ் உடையில் ஹெல்மெட் அணிந்து பலத்த எதிர்ப்புக்கு இடையே சன்னிதானத்தை நெருங்கினார்.
அவருடன் இன்னொரு பெண் பக்தரும் சென்றார். சன்னிதானத்தை நெருங்கிய பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கேரள ஐஜி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடைய சன்னிதானத்தை நெருங்கிய பெண்களை திருப்பி அனுப்புமாறு கேரள அரசு உத்தரவிட்டது.
திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு
சபரிமலை கலவர பூமியாக மாற அரசு விரும்பவில்லை என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். போராடத்தை வெளிப்படுத்துவதற்கான இடம் சபரிமலை இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார். பக்தர்களின் கடும் எதிர்ப்பால் பத்திரிக்கையாளர் உள்பட 2 பெண்களையும் திரும்பிச்செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பந்தள மன்னர் குடும்பம் உத்தரவு
சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூட பந்தள மன்னர் குடும்பம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.ஜி. பேச்சுவார்த்தை
சன்னிததானத்துக்கு வெளியே பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள பக்தர்களுடன் கேரள ஐ.ஜி பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். தாக்குதல் நடத்தி எதிர்ப்பாளர்களை கலைக்கும் எண்ணம் போலீசுக்கு இல்லை என்றும், சபரிமலை கட்டுப்பாடுகளை தகர்த்து பெண்களை சன்னிதானம் அழைத்துச் செல்ல மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி