’அமெரிக்காவில் நுழைந்தால் கைது’ஹோண்டுராஸ் உட்பட 3 நாட்டு மக்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ‘‘சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவீர்கள்’’ என ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசை சேர்ந்த 1,600 பேர் கவுதமாலா வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய எல்லையில் காத்திருக்கின்றனர். இது பற்றிய தகவல் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கிடைத்தது. இதையடுத்து  ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைபவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படுவார்கள்’ என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், `ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சல்வடார் நாட்டு அரசுகள், தங்கள் நாடுகளின் எல்லை வழியாக யாரையாவது அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதித்தால், அந்த நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார். கடந்தாண்டில் கவுதமாலாவுக்கு அமெரிக்கா 248 மில்லியன் டாலர், ஹோண்டுராசுக்கு 175 மில்லியன் டாலர், எல்சல்வடாருக்கு 115 மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: