லண்டன்: உலகளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாக மேன் புக்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது கடந்த 1969ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான மேன் புக்கர் விருது வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ்க்கு (46) வழங்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய ‘மில்க்மேன்’ என்ற புத்தகத்துக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இவருக்கு ரூ.58.85 லட்சம் பரிசு தொகைக்கான காசோலையை வழங்கப்பட்டது.