கொழும்பு: இந்திய உளவு அமைப்பான ரா தம்மை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறவில்லை என இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்பு கொண்டு தமது மறுப்பை சிறிசேனா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நிலவும் நல்லுறவை கெடுக்கும் வகையில், திட்டமிட்டு அடிப்படை ஆதாரமற்ற பொய்யான தகவல்களை பரப்பி இருப்பதாக சிறிசேனா கூறியுள்ளார்.