சென்னை: வேர்க்கடலை வியாபாரம் செய்துவரும் கலைவாணன், வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகர் 3வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஒன்றரை வயது மகன் மோனிக்குடன் தாய் மகாலட்சுமி வீட்டுக்கு வெளியில் நின்றிருந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் லாரி வந்தது. குழந்தையை வெளியில் விட்டு விட்டு குடம் எடுக்க மகாலட்சுமி சென்றுள்ளார். அப்போது லாரியில் சிக்கி குழந்தைஉயிரிழந்தது. அதையடுத்து லாரி அங்கு நிற்காமல் விரைந்து சென்றது. தகவலறிந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்,