தண்ணீர் லாரியில் சிக்கி குழந்தை பலி

சென்னை: வேர்க்கடலை வியாபாரம் செய்துவரும் கலைவாணன், வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் நகர் 3வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஒன்றரை வயது மகன் மோனிக்குடன் தாய் மகாலட்சுமி வீட்டுக்கு வெளியில் நின்றிருந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் லாரி வந்தது. குழந்தையை வெளியில் விட்டு விட்டு குடம் எடுக்க மகாலட்சுமி சென்றுள்ளார். அப்போது லாரியில் சிக்கி குழந்தைஉயிரிழந்தது. அதையடுத்து லாரி அங்கு நிற்காமல் விரைந்து சென்றது. தகவலறிந்து வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார்,

தண்ணீர் லாரியை மடக்கிபிடித்து லாரி டிரைவர் உத்திரமேரூர், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (25). என்பவரை கைது செய்தனர். இதனிடையே, சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ராஜமங்கலம் போலீசார் அங்கு வந்து அவர்களை கலைக்க முயன்றனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: