×

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைபெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் நீடித்து வரும் நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை இந்த பருவத்தில் இதுவரை 49 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. தற்ேபாது சில இடங்களில் வறண்ட வானிலை நிலவிவரும் சூழலில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக சாத்தனூர் அணையில் 70 மிமீ மழை பெய்துள்ளது. வால்பாறையில் 60 மிமீ மழை பெய்துள்ளது.

தற்போது, பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவினாலும், தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : districts ,Tamil Nadu ,Weather Center Announcement , Some districts, Tamil Nadu will , raining, Weather Center Announcement
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8...