சென்னை: டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுசெயலாளர் திருச்செல்வன் கூறியதாவது: டாஸ்மாக் ஊழியர் களுக்கான பொது பணியிட மாறுதல் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகியவற்றின் மீது சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை ஆணையை நீக்குவதற்கு நிர்வாகம் முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தற்போது பெட்ரோல் விலை மற்றும் பேருந்து கட்டணம் ஆகியவற்றின் விலை உயர்வை கருத்தில்கொண்டு எப்.டி.சி தொகையை மாதம் ரூ.1,000 ஆக வழங்க வேண்டும். மேலும், கடை ஊழியர்களுக்கு மருத்துவ செலவுகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.