புழல் சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல்

புழல்:  புழல் மத்திய சிறைச்சாலையில் விசாரணை பிரிவில் இருக்கும் கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக, நேற்று முன்தினம் இரவு சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், கைதிகளின் அறைகளில் சோதனை நடந்தது.  அப்போது, ஒரு அறைக்குள் இருந்த கழிவறையில், ஒரு செல்போன், சார்ஜர், சிம் கார்டு மற்றும் பேட்டரி ஆகியவை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், மேற்கண்ட அறையில் ராயப்பேட்டையை சேர்ந்த விமலநாதன் (எ) சைக்கோ விமல் (27) என்பவர் இருப்பதும், இவர்தான் செல்போன் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: