சென்னை: காசிமேட்டைசேர்ந்தவர் அடைக்கலதாஸ் (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் ராபின் (19) என்பவருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது புதுச்சேரியில் இருந்து சென்னையை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்திசையில் வந்து அடைக்கலதாஸ் மற்றும் ராபின் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.