சென்னை: அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சார்ந்தவர் தன்ராஜ் (28). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு, தன்ராஜ் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையிடம் பாலியல் ரீதியாக ஏதோ செய்து கொண்டு இருந்தார். சத்தம் கேட்டு எழுந்த கல்பனா, குழந்தைக்கு கணவன் தன்ராஜ், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, அவரை கண்டித்து குழந்தையை மீட்டார். பின்னர் நேற்று காலை தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுது புலம்பி உள்ளார்.