தக்கலை: கன்னியாகுமரி தக்கலையில் பாஜக அரசின் நான்கரை ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
நம்முடைய திட்டங்கள் இ்ன்றைய தேவைக்கும், நாளைய தேவைக்கும் கணக்கிடக்கூடாது. ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு எப்படி தேவையோ அந்த வகையில் திட்டமிட வேண்டும். இரட்டை ரயில் பாதை திட்டம் தேவை. அப்போது தான் கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். இரட்டை ரயில் பாதை அமைக்க 50% மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. முதன்முறையாக மாநில அரசின் நிதி இல்லாமல் மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்கி 4 ஆயிரம் கோடி அளவில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற உள்ளது. அப்போது முழுவதும் மின்சார பாதை அமையும். 4 வழிச்சாலை என்பது ஒட்டு மொத்த மக்களின் எதிர்காலம் ஆகும்.