×

அனைத்துக்கட்சி போராட்டம் மைல்கற்களில் இந்திக்கு பதில் ஆங்கிலத்தில் ஊர் பெயர்கள்

கோவை: கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை தற்போது நான்குவழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள மைல் கற்களில் ஊர் பெயர் தமிழ் மற்றும் இந்தியில் எழுதப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.  மைல் கற்களில் இந்தியில் எழுதப்பட்டதை கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக்கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சியில் போராட்டம் நடத்தினர்.  அதேேபால், கோவை - பொள்ளாச்சி சாலையில் கோவில்பாளையம் சேரன் நகர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மைல்கற்களில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்கள் பெயின்ட் ஊற்றி அழிக்கப்பட்டது. இதை தொடர்ந்து,  மைல்கற்களில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று அழித்தனர். இந்தியில் எழுதப்பட்டிருந்த இடத்தில், ஊர் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : migrants , All Party Struggle and Urban Names
× RELATED வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர்...