திமுக சிறுபான்மையினர் நல உரிமை நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை: திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

மாநில செயலாளர் முன்னாள் எம்.பி. மஸ்தான் தலைமை தாங்கினார். மாநில தலைவர் மைதீன்கான் எம்.எல்.ஏ. முன்னிைல வகித்தார். துணை செயலாளர்கள் கு. லாரன்ஸ், எல்.எஸ்.எஸ். மோகன், விஜயகுமார், நூருல்லா, சேக் அப்துல்லா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வருகிற 26ம் தேதி இஸ்லாமிய சமுதாயம் சார்பில் கலைஞருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் சென்னையில் நடைபெறுகிறது.

சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை உடனே ராஜி னாமா செய்ய வேண்டும், வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் தில்லமுல்லு நடக்காத வகையில் நிர்வாகிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்கிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: