சென்னை : அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவை நவம்பர் 15ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இந்த விழாவுக்கு சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று கூறிய அவர், அக்டோபர் 17ம் தேதி நடக்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த முன்னோட்ட விஷயங்களை ஆலோசிப்போம் என்றும் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.