சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும்: தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டி

மதுரை: அதிமுகவினர் தினமும் ஆயிரக்கணக்கான சைக்கிள்கள் வழங்க பணம் எங்கிருந்து வந்தது என தங்க.தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஓட்டுக்கு 5,000 வீதம் அதிமுக பட்டுவாடா செய்யவுள்ளதாக புகார் தெரிவித்தார். மேலும் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார். தான் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகட்டும் என தெரிவித்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இப்போதும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று தங்க.தமிழ்ச்செல்வன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: