சென்னை : தமிழ் மொழிக்கு பிரதமர் செய்த நன்றியை மறப்பது ஏற்புடையதல்ல என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி என பிரதமர் கூறியபோது அவருக்கு யாரும் நன்றி கூட தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர், ஆன்மீக தமிழை பின்னால் தள்ளிவைத்து விட்டோம், அதை முன்னால் கொண்டுவர வேண்டும் என்றும் சென்னை பல்கலை.யில் ஆன்மீக தமிழுக்கு இருக்கை கொண்டு வந்தால் ரூ10 லட்சம் தருவேன் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.