சென்னை: சென்னை பாரிமுனையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மான்கொம்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மான்கொம்புகளை சாலையில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை மண்ணடியில் நேற்று ரூ.3 லட்சம் மதிப்புள்ள மான்கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.