சென்னை: பதில் அளிக்க அவகாசம் கேட்பது சந்தேகம் அளிக்கிறது என்று வைரமுத்து குறித்து தமிழக பாஜ தலைவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர். நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.