ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல் 17 வீரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின், மேற்கு பாரா மாகாணத்தின் ராணுவ முகாம் மீது நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நேற்று காலை வரை தொடர்ந்தது. இத்தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதில் 17 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 11 வீரர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 4 வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலை தொடர் ந்து, முகாமிற்கு அருகில் இருந்த இரண்டு சோதனைச் சாவடிகளையும் தீவிரவாதிகள் தாக்கியழித்ததுடன், அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களையும் எடுத்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: