×

மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி

ஐதராபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி விக்கெட்கள் இழப்பின்றி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2 வது டெஸ்ட் போட்டி,  ஐதராபாத் நடைபெற்றது. இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சகமாக உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதை தொடர்ந்து இந்திய அணி முதல் முதல் இன்னிங்சில் தொடங்கியது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகளை விட இந்திய அணி 56 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 92 ரன்களும், ரகானே 80 ரன்களும் எடுத்தனர். 2 வது இன்னிங்சில் மேற்கிந்திய தீவு அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் மொத்தம் 10 விக்கெட்டுகளை சாய்த்தார். 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் விக்கெட்டுகள் இழப்பின்றி  வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Test ,West Indies , India, won, West Indies, winning the series
× RELATED சில்லி பாயின்ட்…