உலகம் உறுதி செய்தது பேஸ்புக் நிறுவனம் 3 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருட்டு Oct 14, 2018 நிறுவனம் வாஷிங்டன் : உலகெங்கிலும் பல கோடி பயனாளிகளை கொண்டுள்ளது பேஸ்புக் நிறுவனம். இதில் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், 3 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக்கின் மேலாண்மை துணை தலைவர் கெய் ரோசன் கூறியதாவது:கடந்த ஜூலை 2017 முதல் செப்டம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில், 3 கோடி பயனாளிகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு, அதாவது ஒரு பயனாளியிடம் இருந்து அவரது நண்பர்கள், உறவினர்கள் என்று 4 லட்சம் மக்களின் கணக்குகளை திருடியுள்ளனர்.இவ்வாறு 3 கோடி பேரின் தகவல்களை திருடியுள்ளனர். பயனாளர்களின் விவரங்கள் ஏற்கனவே இரு வாரங்களுக்கு முன்பு பாதுகாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கள் கணக்கை லாக் அவுட் செய்யவோ அல்லது தங்கள் பாஸ்வேர்ட்டை மாற்றவோ தேவையில்லை. மேலும், இந்த சைபர் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்களுக்கு பயனாளிகளின் கிரெடிட் கார்டு தகவல்கள் கிடைக்காத வண்ணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து எப்பிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 நபர்கள் கைது..!!
பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை: பிரதமருக்கு சம்மன் அனுப்பப்படும் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல : பூவுலகின் நண்பர்கள் பதிவு
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை.. அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி!!
இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக் கவுண்டவுன் தொடங்கியது.. ஜூலை 26ல் தொடங்கும் விழா கொண்டாட்டம்..!!
கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி..!!