×

இந்தோனேசியாவில் மீண்டும் நிலச்சரிவு: மாணவர்கள் உள்பட் 22 பேர் பலி

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாணவர்கள் உள்பட் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் கடந்த மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டெய்லிங் நடால் மாவட்டத்தில் உள்ள மவுரா சலாதி கிராமத்தில் இஸ்லாமிக் உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அந்த பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 11 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாணவர்கள் உள்பட் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், 15-க்கு மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் என்று பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indonesia, landslide, students, kills
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் பரப்புரை