வளர்ப்பு நாய் அடித்து கொலை : இலங்கை அகதி கைது

வேளச்சேரி: வேளச்சேரி சாரதி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் செல்வி (33). அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்துகிறார். இவரது கணவர் ஜெகன்நாத் (36). சலவை கடை நடத்துகிறார். இவர்களுக்கு மேடவாக்கத்தில் சொந்தமாக வீடு உள்ளது. கடந்த 22ம் தேதி செல்வி  தனது வளர்ப்பு நாயை மேடவாக்கத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று இரவு 8 மணிக்கு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது கணவர்  ஜெகநாத், ‘எதற்காக நாயை புது வீட்டுக்கு அழைத்து சென்றாய்’’ என செல்வியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த செல்வி மயிலாப்பூரில் வசிக்கும் தனது தங்கை வீட்டுக்கு சென்று தங்கி உள்ளார். மறுநாள் காலையில் செல்வி வீட்டுக்கு வந்தபோது நாய் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி உடனே நாயை மீட்டு கால்நடை  மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நாய்  இறந்தது. புகாரின்பேரில், வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, ஜெகநாதன் 10 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து வந்த அகதி என்பது தெரிந்தது. எனவே போலீசார் அவரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: