வேலூர்: முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கைதான நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நேற்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான, சோளிங்கர் பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாதன், ஆம்பூர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சந்திக்க வந்தனர். செவ்வாய்க்கிழமை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டு திரும்பி சென்றனர். ஆனால், வழக்கறிஞர் என்ற முறையில், மாலை 3 முதல் 5 மணி வரை சந்திக்கலாம் என்ற சிறை விதிப்படி, சோளிங்கர் பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாதன் ஆகியோர் மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை கருணாசை சந்தித்தனர். ‘சக எம்எல்ஏ என்ற முறையிலும், வழக்கறிஞர்கள் என்ற முறையிலும் சந்தித்தோம்’ என அவர்கள் தெரிவித்தனர்.