கன்னியாகுமரியிலும் புஷ்கர விழா நடத்த திட்டம்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் புஷ்கர விழா நடைபெறுகிறது. இந்த விழாவை இந்து அமைப்புகள் நடத்துகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மகாதேவர் கோயில் அருகே ஓடும் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் மஹா புஷ்கர விழா வரும் அக்டோபர் 12  முதல் 23ம்தேதி வரை நடக்கிறது. விழாவை  இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., சேவாபாரதி, கிராம கோயில்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட இந்து இயக்கங்கள் இணைந்து நடத்துகின்றன. 12 நாட்களும் ஆற்றில் ஹோமங்கள், ஆரத்தி, முன்னோர்கள் நினைவு தர்ப்பணம், கோதானம் உட்பட பல தானங்கள் நடக்க உள்ளன. விழாவில் 5 லட்சம் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு ெசய்யப்பட்டு வருகிறது. இதற்கான தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று திக்குறிச்சி மகாதேவர் ேகாயிலில் நடந்தது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: