அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் புதுகையில் போட்டியிட டிடிவி.தினகரன் தயாரா?

புதுக்கோட்டை:புதுக்கோட்டை, சின்னப்பா பூங்காவில்  நேற்று இரவு அதிமுக சார்பில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுகாதார துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது : தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களில் இருந்து ஆட்களை திரட்டி வந்து புதுக்கோட்டையில் டிடிவி.தினகரன் பொதுக்கூட்டம் நடத்தி அதில், என் மீது  அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளார்.    நெஞ்சில் வஞ்சத்தை வைத்து விஷத்தை அவர் கக்கியுள்ளார். துணிவு இருந்தால் வரும் பொதுத்தேர்தலில் புதுக்கோட்டைதொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் களம்  இறங்கத் தயார்.  டிடிவி.தினகரனின் குடும்பத்தில் பல கட்சிகள் முளைத்துள்ளன.  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது சசிகலாவின் படத்தையே பயன்படுத்தக்கூடாது என்று கூறியவர்தான்  தினகரன்.  டிடிவி தினகரன் சசிகலாவின் விசுவாசியில்லை. சசிகலா புஷ்பாவிடம் விசுவாசியாக இருந்தார். அதனால் தான் ஜெயலலிதா அவரை ஒதுக்கி வைத்தார்.

பதுங்கு குழிக்குள்  10ஆண்டுகள் பதுங்கி இருந்துவிட்டு தற்போது பதவி ஆசையில் நடமாடுகிறார். இவர் ஒரு போதும் வெற்றி பெற முடியாது.  ஜெயலலிதாவினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தினகரன். பதவி ஆசையினால் அவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஊர் ஊராக மேடை போட்டு பேசி வருகிறார். ஒருபோதும்  இவரது ஆசை நிறைவேறாது. இவ்வாறு விஜயபாஸ்கர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: