கோவை: தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியும், பெரியாரும் கள்ளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். ராஜாஜி, ம.பொ.சியும் கள்ளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தவர்கள். கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தடை உள்ளது. அந்த அடிப்படையில் காந்திய கொள்கைகளைப் பற்றிய புரிதல் ஏற்படுத்தும் வகையில் வரும் அக்டோபர் 2ல் காந்தி ஜெயந்தியன்று சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு கள் படையலாக வைத்து வழிபட கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.